செங்கல்பட்டு: கோயிலுக்கு சென்ற  மூதாட்டி சடலமாக மீட்பு!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே கோவிலுக்கு சென்று மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

செங்கல்பட்டு: கோயிலுக்கு சென்ற  மூதாட்டி சடலமாக மீட்பு!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காரணைபுதுச்சேரி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 60). இவர் நேற்று மாலை காரணைபுதுச்சேரி அருகே உள்ள முத்தமாரியம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் ஆட்டோவில்  வந்துள்ளார். லட்சுமி நடந்து போவதை கண்ட ஆட்டோ ஓட்டுனர் ஆறுமுகம் நானே வீட்டில் விடுவதாக கூறி ஆட்டோவில் ஏற்றி சென்றுள்ளார்.

ஆனால் கோயிலுக்கு சென்ற லட்சுமி  திரும்ப வீட்டுக்கு வரததால் லட்சுமியை உறவினர்கள் அவரை உறவினர்கள் தேட தொடங்கியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் உறவினர்கள் கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் லட்சுமியை தேடிவந்த நிலையில் சிங்கபெருமாள் கோயில் அடுத்த ஆப்பூர் காப்புக்காட்டில் கழுத்தில் கத்தியால் குத்தியும் தலையில் பலத்த காயங்களுடனும் மூதாட்டி ஒருவர் சடலமாக கிடப்பதாக பாலூர் காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு சென்று பார்த்த பிறகு தான் தெரிகிறது காணாமல் போன மூதாட்டி தான் இங்கு சடலமாக கிடைக்கிறார் என்று. இதையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து மூதாட்டியை கொன்றது யார்? கொலைக்கான காரணம் என்ன?சொத்துக்காக நடந்த கொலையா? ஆட்டோ டிரைவர் ஆறுமுகத்திற்கும் மூதாட்டிக்கும் என்ன தொடர்பு? என்பது குறித்து  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆட்டோ ஓட்டுனர் ஆறுமுகத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.