சுடுகாட்டில் கஞ்சா விற்பனை...தப்பியோட முயன்ற இருவரை விரட்டி பிடித்த போலீஸ்...!

சென்னை அரும்பாக்கம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு நபர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

சுடுகாட்டில் கஞ்சா விற்பனை...தப்பியோட முயன்ற இருவரை விரட்டி பிடித்த போலீஸ்...!

சென்னை அடுத்த அமைந்தகரை சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக, அமைந்தகரை போலீசாருக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்து கொண்டிருந்தன. அதனைதொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்க்கொண்டனர்.

இதனிடையே நேற்று அரும்பாக்கம் சுடுகாட்டு பகுதியில் இரண்டு நபர்கள் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசார கண்டதும் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த இருவரும் தப்பி ஓட முயற்சித்தனர். இருவரையும் மடக்கி பிடித்த போலீசார்,. அவர்களிடமிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.\

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் அரும்பாக்கம் என் எஸ் கே நகர் பகுதியை சேர்ந்த ரவுடி கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளி சஞ்சீவ்குமார் என்பது தெரியவந்தது. அதில் ரவுடி கார்த்திக் மீது  அரும்பாக்கம் காவல் நிலையத்தில் 3 கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் இருவர் மீதும் வழக்குபதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.