கடை வாசலில் படுத்து உறங்குவதுபோல் நடித்து பணம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை லாவகமாக களவாடிய களவாணி!!

20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகளை கொள்ளையடித்த பலே திருடன்...

கடை வாசலில் படுத்து உறங்குவதுபோல் நடித்து பணம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை லாவகமாக களவாடிய களவாணி!!

பூந்தமல்லி அருகே கடை வாசலில் படுத்து உறங்குவதுபோல் நடித்து, டீக்கடையில் கொள்ளையடிக்கும், சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம்  பூந்தமல்லி சாலையில் மைக்கேல் என்பவர் சொந்தமாக டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். 

அவர் தற்போது வழக்கத்திற்கு மாறாக இரவு நேர ஊரடங்கு என்பதால் இரவு 10 மணிக்கு முன்னதாகவே கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிடுகிறார். அதன்பின்னர் சாலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. 

இந்த சந்தர்ப்பத்தைப் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பலே திருடன் ஒருவர், பூட்டப்பட்ட கடையின் வாசலில் படுத்து உறங்குவது போல் நடித்து, கடை ஷட்டரின் பூட்டை திருந்து, லாவகமாக உள்ளே சென்று, கல்லாவில் இருந்த, 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகளை கொள்ளையடித்துள்ளான். 

இது குறித்து தகவலறிந்த கடையின் வணிகர்கள்  அங்கு வைக்கப்பட்டிருந்த  சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்து பார்த்தபோது பூட்டப்பட்ட கடையின் வாசலில் படுத்து உறங்குவது போல் நடித்து, லாவகமாக திருடி சென்றது அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.