பெண்ணிடம் அத்துமீறிய பைக் டேக்சி ஊழியர் கைது!

பெண்ணிடம் அத்துமீறிய பைக் டேக்சி ஊழியர் கைது!

சூளைமேட்டில் இருந்து ரேபிட்டோ செயலியில் இருசச்கர வாகனம் புக் செய்துவந்த கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதாக கல்லூரி மாணவி கொடுத்த புகாரில் ரேபிட்டோ ஊழியர் ரமேஷ் என்பவரை ராயபேபேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். 

சூளைமேட்டில் இருந்து ராயப்பேட்டை பகுதிக்கு தனது சகோதரர் வீட்டிற்கு பைக் டேக்சி ஆப் மூலமாக இருசக்கர வாகனத்தில் வந்த போது பைக் டேக்சி ஓட்டுநர் ரமேஷ் கல்லூரி மாணவியிடம் அத்து மீறியுள்ளார். அவற்றை வீடியோவாக பதிவு செய்த அந்த பெண் வீடியோ ஆதாரத்தோடு இராயபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ரேபிடோ ஊழியர் ரமேஷை கைது செய்த ராயப்பேட்டை போலீசார் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

விசாரணையில் ரமேஷ் மதுராந்தகத்தை சேர்ந்தவர் என்றும் பகலில் பரோட்டோ மாஸ்டராகவும், இரவு மற்றும் விடுமுறை தினங்களில் பைக் டேக்சி ஓட்டுநராகவும் செயல்பட்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. 

இதையும் படிக்க:தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு சிலை; தமிழ்நாடு அரசு அறிவிப்பு!