பவானி ஆற்றில் குளிக்க சென்ற 8 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டியில் பவானி ஆற்றில் மூழ்கி 8 வயது சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பவானி ஆற்றில் குளிக்க சென்ற 8 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டியில் பவானி ஆற்றில் மூழ்கி 8 வயது சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பச்சமலை தென்றல் நகரை சேர்ந்தவர் விக்னேஷ்.  இவர் தனது மனைவி மற்றும் மூன்றாம் வகுப்பு படிக்கும் மகன் விஜயுடன் கள்ளிப்பட்டியில் உள்ள பவானி ஆற்றில்  குளிப்பதற்காக சென்றார். அப்போது கணவன் மனைவி இருவரும் துணி துவைத்து கொண்டிருந்த போது ஆற்றில் தனியாக குளித்த விஜய் நீரில் மூழ்கினான்.

இதனையடுத்து பெற்றோர் அவனை மீட்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி சிறுவனின் உடலை மீட்டனர்.