மதுபோதையில் ஏற்பட்ட தகராறு- இளைஞரை வெட்டி கொன்ற கும்பல்

புதுக்கோட்டை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறின் காரணமாக இளைஞரை ஓட ஓட வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுபோதையில் ஏற்பட்ட தகராறு- இளைஞரை வெட்டி கொன்ற கும்பல்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெம்மக்கோட்டையைச் சேர்ந்தவர் துப்பாக்கி முருகன். இவரது மகனான செல்வகணபதி, நேற்று மதுபோதையில் கலிபுல்லா நகர் பகுதியைச் சேர்ந்த சிலருடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது .

இதனால் ஆத்திரமடைந்தவர் தகராறில் ஈடுபட்டவரான செல்வகணபதியை கொலை செய்யும் நோக்குடன் அரிவாளுடன் விரட்டியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்த சென்ற செல்வகணபதி அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் மண்டபத்தில் தஞ்சம் அடைந்ததாக கூறப்படுகிறது.

அதன்பின்னர் தன்னை கொலை செய்யும் நோக்கில் துரத்தி வந்தவர்கள் திரும்பி சென்றுவிட்டார் என நினைத்த செல்வகணபதி, பதுங்கியிருந்த இடத்தில் இருந்து வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மறைந்திருந்த மர்மகும்பல் அவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

பின்னர் தகவலறிந்து வந்த போலீசார், இறந்த செல்வகணபதியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், சந்தேகத்தின்பேரில் 5 க்கும் மேற்பட்டோரை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் ஆலங்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில், மது மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களால் சிறிய அளவில் நடந்து வந்த குற்றங்கள் இன்று கொலை அளவிற்கு வளர்ந்துள்ளதாகவும், இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.