மர்ம கும்பல் வெறிச்செயல்... அதிமுக கவுன்சிலர் உயிரிழப்பு!

மர்ம கும்பல் வெறிச்செயல்... அதிமுக கவுன்சிலர் உயிரிழப்பு!

மதுரை பாலமேடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற அதிமுக கவுன்சிலரை வெட்டிப் படுகொலை செய்த மர்ம கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் மாவூத்தன்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் சந்திரபாண்டியன். இவர் அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் 10வது வார்டு அதிமுக கவுன்சிலராக தொடர்ந்து 4 வது முறையாக வெற்றி பெற்று பதவியில் உள்ளார்.

இந்நிலையில்,  இன்று லிங்கவாடி பகுதியிலுள்ள தனது மகளை பார்ப்பதற்காக மதுரை பாலமேடு அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மர்மகும்பல் வழிமறித்து அவரை அரிவாளால் சராமரியாக வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பியோடியது. இதனால் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய சந்திரபாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தார்

தகவல் அறிந்த  பாலமேடு போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பாலமேடு போலீசார் தப்பியோடிய  கொலையாளிகளை தேடிவருகின்றனர்.

அதிமுக கவுன்சிலர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க || புறம்போக்கு இடத்திற்கு பட்டா...வட்டாட்சியர் சிறைபிடிப்பு!