ஒருதலை காதல்...பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞர்...விரட்டி பிடித்த பொதுமக்கள்!

ஒருதலை காதல்...பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞர்...விரட்டி பிடித்த பொதுமக்கள்!

தெலுங்கானாவில் காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தை மர்மநபர் கத்தியால் அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், எஸ்.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : கேரள மாநிலத்தில் வந்தே பாரத் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...!

ஆனால் அப்பெண் இளைஞரின் காதலை ஏற்க மறுத்த நிலையில், ஆத்திரமடைந்த சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெண்ணின் கழுத்தை வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார். அதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக அப்பெண்ணை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்ததோடு, சுரேஷை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இருப்பினும், ஒரு மாநில தலைநகரில் பட்டப்பகலில் இளம் பெண்ணின் கழுத்தை நடுரோட்டில் ஒரு வாலிபர் அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.