ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை...

தாம்பரம் அருகே ஆன்லைனில் ரம்மி விளையாடி  பல லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை இழந்த, வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை...

சென்னை கிழக்கு தாம்பரம் அடுத்த ஆனந்தபுரம் ஜெகஜீவன்ராம் தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி பிரியா இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிய நிலையில் ஐந்து  மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.

முருகன் ஆன்லைனில் தொடர்ந்து ரம்மி விளையாடி பல லட்சம் ரூபாய் இழந்ததாகவும், அவருக்கு கடன் கொடுத்துவர்கள் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்த முருகன் யாரும் இல்லாத சமையத்தில் தனது அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து சேலையூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசார், தூக்கிட்டு இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார், வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.