இறங்கிய வேனின் சக்கரத்தில் சிக்கி மாணவன் உயிரிழப்பு....!!!

இறங்கிய வேனின் சக்கரத்தில் சிக்கி மாணவன் உயிரிழப்பு....!!!

கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை அருகே தனியார் வேனிலிருந்து பள்ளிமுடித்து வீட்டிற்கு திரும்பிய மாணவர்கள்  வேன் சக்கரத்தில் சிக்கி  உயிரிழப்பு.   வேன் ஓட்டுரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை  அருகே சமாதிநடை மேலவீடு பகுதியை சேர்ந்தவர்  சதீஷ்குமார்.  வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.  இவரது மனைவி நந்தினி இவர்களுக்கு  சூரியநாத்  (வயது7) மற்றும் சபரிநாத் ஆகிய இருமகன்கள் உள்ளனர். குலசேகரம் அருகே  தனியார் பள்ளியில் படித்துவரும் சூரியநாத் மற்றும் சபரிநாத் தினமும் பொன்மனை பெருவள்ளிகடவு பகுதியை சேர்ந்த  ஆன்றனி ஜார்ஜ் கிங்ஸ்டன்  (வயது 55)  என்பவரது தனியார் வேனில் பள்ளிக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில் இன்று மாலை பள்ளி முடித்து வேனில் மாணவர்களை வீட்டிற்கு அருகில் கொண்டு சென்று இறக்கிய ஓட்டுனர்  ஆன்றனி ஜார்ஜ் கிங்ஸ்டன் வேனை பின்னோக்கி திருப்பியதில் எதிர்பாராதவிதமாக வேன்  மாணவர்கள் சூரியநாத் மற்றும் சபரிநாத் ஆகியோரை இடித்து தள்ளியது.  இதில் வேனின் பின்சக்கரம் ஏறி இறங்கிறதில் மாணவன் சூரியநாத் சம்பவ இடத்திலேயே உடல்சிதைந்து பலியானார்.  இதேபோல் அவரது சகோதரர் சபரிநாத்  படுகாயமடைந்தார்.  

இதையடுத்து அப்பகுதியினர் மாணவன் சபரிநாதை மீட்டு குலசேகரம் அருகே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.  தீவிர சிகிட்சை பிரிவில் அனுமதிக்கபட்டு அவருக்கு சிகிட்சை அளிக்கபட்டு வருகிறது.  இதையடுத்து உயிரிழந்த மாணவர் சூரியநாதின் உடலை கைபற்றிய குலசேகரம் காவல்துறையினர் வேன் ஓட்டுனர் ஆன்றனி ஜார்ஜ் கிங்ஸ்டன்னை (55) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி முடித்து வீட்டிற்கு செல்ல வேனிலிருந்து இறங்கிய மாணவர்கள் வேன் சக்கரத்தில்  சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:   அக்கம் பக்கம் கண்காணிப்பு திட்டம்.... திட்ட நோக்கம்?!!