தூத்துக்குடி: புதுமண தம்பதி வெட்டி படுகொலை.. ரத்த வெள்ளத்தில் கிடந்த காதலர்கள்!!

கோவில்பட்டி அருகே காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி: புதுமண தம்பதி வெட்டி படுகொலை.. ரத்த வெள்ளத்தில் கிடந்த காதலர்கள்!!

காதல் திருமணம் செய்து கொண்ட காதலர்கள்:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வீரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கராஜ்(28). அதே ஊரை சேர்ந்த தனது மாமா முத்துக்குட்டி என்பவர் மகள் ரேஷ்மாவைவை (20) காதலித்து வந்தார். ரேஷ்மா வீட்டில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாணிக்கராஜ் மற்றும் ரேஷ்மா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் இருவரும் வெளியூரில் தங்கியிருந்துள்ளனர்.

இரத்த வெள்ளத்தில் கிடந்த காதலர்கள்:

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் வீட்டிலிருந்த தம்பதி இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து  போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.