70 வயது முதியவரை கோடாரியால் அடித்துக்கொன்று வயலில் வீசிய சிறுமிகள்!!

கேரளாவில் தாயை துன்புறுத்தியதால் 70 வயது கிழவனை சிறுமிகள் கோடாரியால் அடித்துக்கொன்று வயலில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

70 வயது முதியவரை கோடாரியால் அடித்துக்கொன்று வயலில் வீசிய சிறுமிகள்!!

கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள அம்பலவாயல் கிராமத்தில் ஒரு வீட்டில் தாய் மற்றும் இரு மகள்கள் வசித்து வந்துள்ளனர். அதே வீட்டில் மற்றொரு பகுதியில் முகம்மது கோயா என்ற 70 வயது முதியவர் ஒருவர் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த 70 வயது முதியவர் அடிக்கடி அந்த சிறுமிகளின் தாயாரிடம் சண்டையிட்டு வந்துள்ளார். வழக்கம்போல் சில தினங்களுக்கு முன்பு முகம்மது கோயா சிறுமிகளின் தாயாரிடம் சண்டையிட்டு தாக்க முயன்றுள்ளார். அதனைப் பார்த்த சிறுமிகள் முதலில் தடுக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த முதியவர் அதையும் மீறி  சண்டையிட்டு கொண்டிருந்ததால் கோபமடைந்த சிறுமிகள் இருவரும் அருகில் கிடந்த கோடாரியால் முதியவரின் தலையில் அடித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த முதியவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, அந்த முதியவரின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி வயலில்வெளியில் வீசியுள்ளனர்.

இதனையடுத்து சாக்கு மூட்டை ஒன்று ரத்த கறையுடன் வயல்வெளியில் கிடப்பதை கண்ட கிராம மக்கள் அதிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அச்சமடைந்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற போலீசார் சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தனர். அதில் முதியவர் ஒருவரின் உடல் படுகாயங்களுடன் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் யார் அந்த முதியவர், அவர் கொலை செய்யப்பட்டது எப்படி என்று  விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு, கொலை செய்யப்பட்ட அந்த முதியவரின் பெயர் முகம்மது கோயா என்றும் 70 வயதான அவர் தனது மனைவியுடன் அம்பலவாயல் அருகே ஆரியம்கொல்லி பகுதியில் வசித்து வந்தவர் என்றும் தெரியவந்தது. 

இந்நிலையில், தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தாங்கள்தான் கொலை செய்தோம் என்று கூறி இரண்டு சிறுமிகள் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். எங்கள் தாயாரிடம் தொடர்ந்து சண்டையிட்டு வந்த முகமது கோயாவை ஆத்திரத்தில் நாங்கள் தான் கோடாரியால் அடித்து கொன்று வயலில் வீசினோம் என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். வாக்குமூலத்தின் அடிப்படையில் சிறுமிகளையும், அவர்களின் தாயாரையும் போலீசார் கைது செய்தனர். 

மேலும், அம்மாவை துன்புறுத்திய கிழவனை சிறுமிகள் அடித்துக்கொன்ற சம்பவம் வயநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.