வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 4 பேர் கைது...!

வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 4 பேர் கைது...!

நாமக்கல் மாவட்டம் பள்ளிப் பாளையம் அருகே காட்டுக்குள் வேட்டையாட முயன்ற நான்கு பேரை கைது செய்த போலீசார் அனுமதியின்றி வைத்திருந்த இரண்டு நாட்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் அருகே உள்ள வெள்ளிக்குட்டை வனப் பகுதியில் காட்டுமான்கள் உள்ளன. இவற்றை அவ்வப்போது சட்ட விரோதமாக சிலர் வேட்டையாடி வருவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் இன்று காலை வெள்ளிக்குட்டை வனப்பகுதிக்கு நாட்டு துப்பாக்கியுடன் நான்கு பேர் செல்வதாக வெப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் வெப்படை போலீசார் வெள்ளிக்குட்டை வனபகுதியில் சோதனை மேற்கொண்டபொழுது வனப்பகுதியில் வேட்டையாட முயற்சித்துக் கொண்டிருந்த நான்கு பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.


அவர்களிடம் இருந்து உரிமம் பெறாமல் வைக்கப்பட்டிருந்த நாட்டுரக துப்பாக்கியை பறிமுதல் செய்து நான்கு பேரையும் வெப்படை காவல்நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் 4  நபர்களும் சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்த பிரகாஷ், வெங்கடாசலம், ரமேஷ் மற்றும் சண்முக சுந்தரம் எனத் தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த இரண்டு நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்ததுடன் அவர்களை குமார பாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.