சென்னையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது…  

சென்னையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் இருந்து 46 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது…   

சென்னையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் இருந்து 46 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 46 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். திருவல்லிக்கேணி பகுதிக்குட்பட்ட திப்பு சாகிப் தெரு பகுதியில் செயல்பட்டுவரும் மவுண்ட் கேட் லாட்ஜ் இல்  நிறைய நபர்கள் அடிக்கடி வந்து செல்வதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற திருவல்லிக்கேணி ஆய்வாளர் தலைமையிலான குழு ஒவ்வொரு அறையாக சோதனை மேற்கொண்டதில் இரண்டாவது தளத்தில் உள்ள அறையில் சிலர் பணம் வைத்து சீட்டு கட்டுகளுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த வெங்கடேசன், முகமது, ரவி, ரசூல், உள்ளிட்ட 11 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 46 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 40 சீட்டுக் கட்டுகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 11 பேர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது