சரிகா முதல் சமந்தா வரை விவாகரத்து செய்த பத்து பிரபலங்கள்.....!!

சரிகா முதல் சமந்தா வரை விவாகரத்து செய்த பத்து பிரபலங்கள்.....!!

திருமணம் என்பது இருமணங்கள் இணைந்து கருத்து ஒருமித்து ஒருவருக்கொருவர் ஆதரவாக அமைவதே என்ற ஒளவையாரின் பாடல் விவரிக்கிறது. அப்படி திருமணம் செய்துகொண்டு காலம் முழுக்க வாழ்ந்தவரும் உண்டு பாதியில் கழண்டு சென்றவரும் உண்டு.

தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள், இயக்குனர்கள் பல காரணங்களுக்காக தங்களுடன் பணியாற்றவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு பிறகு சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து சென்றுள்ளனர். அப்படி தமிழ் சினிமாவில் பிரிந்து சென்ற பத்து பிரபலங்கள் பட்டியலை காண்போம்.

கமல்ஹாசன், சரிகா: 
தமிழ் சினிமாவின் 80களின் காதல் மன்னன் அன்றைய சாக்லேட் பாய் என்றால் அது கமல்ஹாசன் தான். ஸ்ரீதிவ்யா உட்பட பல நடிகைகளுடன் சேர்த்து வைத்து கிசுகிசுத்து வந்த கமல் 1978இல் வாணி கணபதி என்னும் பிரபல பாரத நாட்டிய மங்கையை திருமணம் செய்து கொண்டு பத்து வருடங்கள் குடும்பம் நடத்தினர். பின்னர் 1988 நடிகை சரிகாவுடன் திருமணம் செய்துகொண்டு ஷ்ருதி, அக்ஷரா, என்று இரு மகள்களை பெற்றெடுத்தார். அதன் பின்னர் 16 ஆண்டுகள் கழித்து 2002இல் விவாகரத்து செய்துகொண்டு கௌதமியுடன் திருமணம் ஆகாமலே சேர்ந்து வாழ்ந்து வந்தவர் தற்போது அவரிடமும் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

பார்த்திபன், சீதா:
தனது படங்களில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்ல முயற்சிக்கும் வெகுசில நடிகர்களில் பார்த்திபன் ராதாகிருஷ்ணனும் ஒருவர். இவர் 1989இல் வெளிவந்த புதிய பாதை படத்தில் நடிகை சீதாவுடன் இணைந்து நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட காதலினால் அடுத்த ஆண்டே திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த பிறகு 2001இல் சில காரணங்களினால் விவாகரத்து செய்துகொண்டனர்.

ராமராஜன், நளினி:
80களில் பல நூறுநாட்கள் படங்களை கொடுத்து முன்னணி நாயகனாக வலம்வந்தவர் ராமராஜன் இவரின் நடனம், ஆடை அலங்காரம், நடிப்பு இதற்காக இன்றளவும் இவருக்கு ரசிகர்கள் இருந்து வருகின்றனர். 1987இல் பிரபலமாக இருந்து வந்த நடிகை நளினியை இவர் திருமணம் செய்துகொண்டார். அருண் அருணா என்ற இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த பிறகு 13 வருடம் திருமண வாழ்க்கையை இவர்கள் முடித்து கொண்டனர்.

பிரதாப் போத்தன், ராதிகா: 
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம்வந்தவர் ராதிகா பிரபல நடிகர் M.R ராதாவின் மகளான இவர் 1985ம் ஆண்டு இயக்குனர் பிரதாப்பை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அடுத்த ஆண்டே அவரை விவாகரத்து செய்துவிட்டார். பின்பு 1990ம் ஆண்டு ரிச்சர்டு கார்டி எனும் வெளிநாட்டவரை லண்டனில் திருமணம் செய்துகொண்டு ராயனே ஹார்டி எனும் பெண் குழந்தையை பெற்றெடுத்தார் பின்னர் சில காரணங்களினால் 1992ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்துவிட்டு பத்து வருடங்கள் கழித்து நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துகொண்டார்.

ரகுவரன், ரோகினி:
தமிழில் மிக கொடூரமான வில்லன் என்றால் உடனே நினைவிற்கு வருவது ரகுவரன் தான் இவர் 1996 ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார். திருமணமான இரண்டு வருடத்தில் இவர்களுக்கு ரிஷிவரன் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த ஆறு வருடங்களில் ரகுவரன் மற்றும் ரோகிணி விவாகரத்து பெற்று பிரித்துவிட்டார்கள்.

பிரகாஷ்ராஜ், லலிதா:
தமிழ் வில்லன்களின் வரிசையில் அடுத்து மிக முக்கியமானவர் என்றால் அது பிரகாஷ்ராஜ் கதாநாயகன், குணச்சித்திரம், நகைச்சுவை என்று அனைத்து கதாபாத்திரத்தையும் கட்சிதமாக ஏற்று நடிப்பவர். இவர்  நடிகை லலிதா குமாரி என்பவரை 1994ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்களும், மகனும் உள்ளார்கள். பிரகாஷ்ராஜ் அவருடைய முதல் மனைவி லலிதாவை 2009ல் விவாகரத்து செய்து விட்டு, 2010ம் ஆண்டு நடன இயக்குனர் போனி வெர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்

சுரேஷ் மேனன், ரேவதி:
நடிகை ரேவதிக்கும், கேமராமேனும், டைரக்டருமான சுரேஷ் மேனனுக்கும், 1986ல் திருமணம் நடைபெற்றது. சுரேஷ்மேனன் தயாரித்த புதியமுகம் படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 27 வருடங்களுக்குப்பின் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தானது.

செல்வராகவன், சோனியா அகர்வால்: 
தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குநர் செல்வராகவன், இவர் இயக்கிய சில படங்களில் நடிகை சோனியா அகர்வாலுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணமான சில வருடங்களிலேயே இருவரும் பிரிந்துவிட்டனர். பின்னர் செல்வராகவன் அவரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய கீதாஞ்சலியைத் 2011ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஏ.எல் விஜய், அமலாபால்: 
ஏ எல் விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் மற்றும் தலைவா படத்தில் நடித்திருந்த அமலாபாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஏ எல் விஜய். திருமணமான மூன்று  வருடத்திற்கு உள்ளாகவே இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பிறகு ஏ எல் விஜய் 2019இல் மருத்துவர் ஐஸ்வர்யா எனும் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

நாக சைதன்யா, சமந்தா: 
சமீபகாலமாக வைரலாகி வருகிற விவாகரத்து செய்தி என்றால் அது சமந்தாவின் செய்தி தான். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். தென்னிந்தியாவின் பிரபல காதல் ஜோடிகளாக வலம்வந்த இவர்கள். திருமணமான நான்கு ஆண்டுகளில் சில கருத்து வேறுபாடுகளால் கடந்த அக்டோபர் மாதம் விவாகரத்து வாங்கி பிரிந்துவிட்டனர்.

விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில் கெட்டுப்போறவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை இதை புரிந்துகொள்ளாதவர் சீக்கிரத்தில் பிரிந்துவிடுகிறார்கள். அழகு இருப்பவனா, அறிவு இருப்பவனா, அந்தஸ்து இருப்பவனா, என்று பார்த்து திருமணம் செய்வதை விடுத்து அன்பாக இருப்பவனா என்பதற்கு முன்னுரிமை கொடுத்தால் கல்யாணம் பலகாலம் நீளும்.