கங்குலி-கோலிக்கு இடையே தொடங்கிய அதிகார பணி போர்: என்ன செய்ய போகிறார் பயிற்சியாளர் டிராவிட்?..

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு கேட்கவே இல்லை என இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

கங்குலி-கோலிக்கு இடையே தொடங்கிய அதிகார பணி போர்: என்ன செய்ய போகிறார் பயிற்சியாளர் டிராவிட்?..

இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் வரும் டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விரக்தியில், விராட் கோலி ஓய்வு கேட்டதை தொடர்ந்து அவர் அணியில் இடம்பெற வாய்ப்பில்லை என செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, தன்னுடைய விளக்கத்தில் நான் டி20 அணி கேப்டன் பதவியில் இருந்து மட்டுமே விலகுவதாக அணி தலைமையிடம் பேசியிருந்தேன். ஆனால் டெஸ்ட் அணி அறிவிப்பதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னர் தலைமை அணி தேர்வாளர் அழைத்து  ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து என்னை நீக்கிவிட்டதாக கூறினார்.

அதற்கு முன் என்னிடம் இதுகுறித்து யாரும் எதுவும் பேசவே இல்லை. கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா நியமிக்கப்பட்டத்தில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ரோகித் திறமையான வீரர். கேப்டன் பதவிக்கு தகுதியானவர். நான் இப்போதும் இந்திய அணிக்காக தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாட தயாராகவே இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்  கோலி - ரோஹித் நட்பில் எந்த ஒரு விரிசலும் இல்லை என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் கோலி - கங்குலி ஆகியோரின் மாறுபட்ட கருத்துகள் வெளியாகியுள்ளன. இந்தப் புதிய விரிசலுக்கான தொடக்கம் இந்திய கிரிக்கெட்டில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது, இதில் புதிய பயிற்சியாளரான டிராவிட்டின் பங்கு என்ன என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.