மாற்றுத்திறனாளி பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொடூரன்... 10 நாட்கள் சித்ரவதை செய்தது அம்பலம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவியை பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாற்றுத்திறனாளி பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொடூரன்... 10 நாட்கள் சித்ரவதை செய்தது அம்பலம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவியை பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த முருகேஸ்வரிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவரது கணவர் வெளியூரில் வேலை பார்ப்பதால் 6 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வருவார் என கூறப்படுகிறது. எனவே பிள்ளைகளை படிக்க வைக்கவும், பார்த்துக்கொள்ளவும் முருகேஸ்வரி கூலி வேலைக்கு சென்று வருகிறார். காலை 8 மணிக்கு சென்று மாலை 5 மணிக்கு வீடு திரும்புவதால் 14 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண் பிள்ளையும், 12 மற்றும் 7 வயதுடைய ஆண்பிள்ளைகள் வீட்டில் தனியாக இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.  தற்போது கொரோனாவால் பள்ளிகள் இயங்காததால் அவர்கள் வீட்டில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த ஒருவர் வீட்டில் தனியாக இருந்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு 10 நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். வீட்டில் இருந்த இரு தம்பிமார்களும் விளையாட சென்ற போது இந்த கொடூர நிகழ்வு நடந்துள்ளது. சம்பவத்தன்று நடு தம்பி அக்காவிற்கு ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதை நேராக பார்த்ததால் அதிர்ச்சியடைந்து அவனை வீட்டை விட்டு விரட்டியுள்ளார். பின்னர் இதுகுறித்து அவனது பெரியம்மாவிடம் தெரிவித்ததை அடுத்து அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்து மகளிர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து குற்றவாளியை போலீசார் சிறையில் அடைத்தனர். எனினும் குற்றவாளிக்கு கடும் தண்டனையை வாங்கிக்கொடுக்க சிறுமியின் பெற்றோர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், சிறுமியின் மருத்துவ அறிக்கையை வைத்து குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்து குற்றவாளியை அதிகபட்ச தண்டனை வாங்கித்தர காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை எனவும் கோரிக்கை வலுத்துள்ளது.