தமிழ்நாடு காவல் துறையையே எழுச்சி பெற செய்யக்கூடிய தருணம்!! புகழ்ந்து தள்ளும் சிவகங்கை எஸ்.பி.செந்தில்குமார்!!

முகநூல் பக்கத்தில் சைலேந்திரபாபுவுக்கு எஸ்.பி பாராட்டு!!

தமிழ்நாடு காவல் துறையையே எழுச்சி பெற செய்யக்கூடிய தருணம்!! புகழ்ந்து தள்ளும் சிவகங்கை எஸ்.பி.செந்தில்குமார்!!
சைலேந்திர பாபு சட்டம் ஒழுக்கு டிஜிபி யாக நியமிக்கப்பட்டுள்ளதுக்கு, மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை செயலில் நிகழ்த்திக் காட்டும் மாமனிதர்! தமிழ்நாடு காவல் துறையையே எழுச்சி பெற செய்யக்கூடிய நல்ல தருணம் இது என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தனது முகநூல் பக்கத்தில் வாழ்த்துகளை உணர்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார். 
 
தமிழ்நாட்டின் 30-வது சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக சைலேந்திரபாபு இன்று பதவியேற்றுக் கொண்டார். கோவையில் நடைபெற்ற சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுமியின் தம்பி கொலை வழக்கின் குற்றவாளியை எண்கவுண்டர் செய்தது, வீரப்பனுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது என பல்வேறு வீர தீர செயல்களுக்கு சொந்தக்காரர் சைலேந்திர பாபு. சாமானிய மக்களிடமும் எளிமையாக நடந்து கொள்வதால், மக்கள் மத்தியில் பிரபலமானார் சைலேந்திர பாபு. 

தற்போது அவர் உயர்ந்த பதவியான சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பதவியேற்றிருப்பது பலரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. சாமானிய மக்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் சைலேந்திர பாபு குறித்து உருக்கமான பதிவை முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 
 
சொல்லும் செயலும் ஒன்று என வாழும் மிகச் சிறந்த காவல் அதிகாரி. எந்த நிலையிலும் தன்னுடைய கொள்கை நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாத உறுதிமிக்க தலைவர் ! எந்த பணியிலும் தன்னுடைய தனித்துவத்தை முத்திரை பதிக்கும் அற்புதமான நிர்வாகி! மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை செயலில் நிகழ்த்திக் காட்டும் மாமனிதர்!

இளைய சமுதாயம் அறிவிலும், திறமையிலும், ஒழுக்கத்திலும் மேம்பட்டு இருக்க வேண்டும் என்ற உண்மையான அக்கறை கொண்ட சமூக சேவகர்!! அவரின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் ஒன்றரை ஆண்டுகாலம் ரயில்வே எஸ்பியாக பணிபுரிந்தது வாழ்வின் உன்னதமான தருணமாகும்.. ரயில்வேயில் அனைத்து மனுக்களையும் ஏற்று கொண்டு FIR பதிவு செய்யும் முறையை கொண்டு வந்தார். பயணிகளின் பயணம் தடைபடாமல், காவலர்கள், அவர்களுடனே பயணித்து புகார் மனுவை பெற்றுக்கொள்ள செய்தார்.
 
தெளிவான ஆலோசனைகள், உறுதியான முடிவு, மனம்விட்டு பாராட்டும் மாண்பு! மனிதாபிமானம் மிக்க, பொது மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகள்! என தரமான அறிவுரைகளை வழங்கி வழி நடத்தும் அற்புதமான தலைவர்!!

உறுதிமிக்க உடல்திறன், பரந்துபட்ட வாசிப்பு, திறமையான நிர்வாகம், கடுமையான உழைப்பு, அரவணைத்து செல்லும் பாங்கு, பொறுப்பு ஏற்றுக் கொள்ளும் தலைமை என சிறந்த மேலாண்மை குணங்களை கொண்ட எங்கள் அன்பிற்குரிய சைலேந்திரபாபு சார், காவல்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்நாடு காவல் துறையையே எழுச்சி பெற செய்யக்கூடிய நல்ல தருணம் ஆகும்..

அவருடைய மகத்தான மக்கள் காவல் பணி சிறந்திட வாழ்த்துக்களும், அவருக்கு இந்த பொறுப்பை வழங்கிய தமிழக அரசுக்கு மனம் நிறைந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.. மேய்ப்பன் எவ்வழியோ, மந்தை அவ்வழி!! என தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் உணர்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார்.