சட்டப்பேரவையில் அதிரடி கிளப்பிய ஸ்டாலின்: என்ன செய்வதென தெரியாமல் இன்று ஆளுநரை சந்திக்கும் இ.பி.எஸ்-ஒ.பி.எஸ்…  

சட்டப்பேரவையில் அதிரடி கிளப்பிய ஸ்டாலின்: என்ன செய்வதென தெரியாமல் இன்று ஆளுநரை சந்திக்கும் இ.பி.எஸ்-ஒ.பி.எஸ்…   

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று சந்திக்கின்றனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரை இரண்டு நாட்கள் அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. அதேபோல், கொடநாடு விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்த சதி நடப்பதாக தமிழ்நாடு அரசு மீது எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று சந்திக்கின்றனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை 11.30 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. இந்த சந்திப்பின் போது கொடநாடு விவகாரத்தை திமுக மீண்டும் விசாரணைக்கு எடுத்தது குறித்து ஆளுநரிடம் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.