”கிரிமியாவை திரும்ப பெறுவோம்” உக்ரைன் அதிபர் 

”கிரிமியாவை திரும்ப பெறுவோம்” உக்ரைன் அதிபர் 

ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.  உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது.  

சமீபத்தில் உக்ரைன் நடத்திய கிரிமியா மன்றத்தில் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட உலக நாடுகளும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களும் காணொலி மூலம் கலந்து கொண்டனர்.  அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ச்கி உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை நிச்சயமாக மீட்டெடுப்போம் எனக் கூறியுள்ளார்.  அவ்வாறு மீட்டெடுக்கும் முயற்சியின் போது மற்ற நாடுகளுடன் ஆலோசனை செய்து அவர்களின் உதவியுடன் செயல்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ”குஜராத்தின் செயலால் இந்தியா வெட்கி தலைகுனிகிறது” பாஜக மூத்த தலைவர்...!!!என்ன செய்தது குஜராத்!!!