கொளத்தூர் தொகுதியா? கன்னித்தீவா? ஜெயக்குமார் விமர்சனம்!
சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார்.
மக்களுக்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை:
சென்னை திரு.வி.க.நகர் ஆடு தொட்டி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், உணவு பொட்டலங்களை வழங்கினார். அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை, மாறாக வாய்ச்சொல் வீரராகவும், விளம்பர பிரியராகவும் தான் முதலமைச்சர் முகஸ்டாலின் செயல்படுகிறார் என்று விமர்சனம் செய்தார்.
இதையும் படிக்க: 14 நாட்களுக்குள் அபராதம் செலுத்தவில்லை என்றால்...ஏலத்தில் விடப்படும்...போலீசார் எச்சரிக்கை!
கொளத்தூர் தொகுதியா? அல்லது கன்னித்தீவா?:
தொடர்ந்து, கொளத்தூர் தொகுதியா? அல்லது கன்னித்தீவா? என்று விமர்சித்த அவர், கொளத்தூர் குளம் ஊராக தான் உள்ளது என்றும், திமுக அரசின் பிடியில் இருந்து எப்பொழுது விடுதலை கிடைக்கும் என மக்கள் எதிர்பார்ப்பதாகவும், விரைவில் நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் கண்டிப்பாக வரும் ,அதில் அதிமுக வெற்றி பெறும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.