"உண்மையைப் பேசிய பி.டி.ஆர்-க்கு அமைச்சரவை மாற்றம்" - அண்ணாமலை

"உண்மையைப் பேசிய பி.டி.ஆர்-க்கு அமைச்சரவை மாற்றம்" - அண்ணாமலை

உண்மையைப் பேசியதற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கிடைத்த பரிசு தான் அமைச்சரவை மாற்றம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

பாஜகவின் என் மண் என் மக்கள் யாத்திரையின் இன்றைய பயணம் மதுரை திருப்பரங்குன்றத்தில் தொடங்கியது. இந்நிகழ்வில் பேசிய அண்ணாமலை, கடன் வாங்குவதில் தமிழ்நாட்டை நம்பர் ஒன் மாநிலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளதாக குற்றம்சாட்டினார். காவிரி விவகாரத்தில் திமுக எந்தவொரு சாதகமான முடிவுக்கும் ஒத்துவரவில்லை எனவும் ,உண்மையைப் பேசியதற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கிடைத்த பரிசு அமைச்சரவை மாற்றம் எனவும் கூறினார்.

இதையும் படிக்க: பழநியில் தக்காளி விற்பனை அதிரடி குறைவு...ஆனந்தத்தில் பொதுமக்கள்!

தொடர்ந்து இன்று டெல்லி செல்லும் அண்ணாமலை பாஜக மேலிடத்துடன் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் பாஜக - அதிமுக இடையே மோதல்போக்கு நீடித்து வரும் நிலையில், என்.டி.ஏ மாநாட்டில் பிரதமர் மோடி முன்னிலையில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.