அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கொரோனாவால் உயிரிழப்பு

கொரோனா பாதிப்பால் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் உயிரிழந்தார். 

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கொரோனாவால் உயிரிழப்பு

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் கொரோனாவால் இன்று காலமானார்.

கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஐஐடி கான்பூர் தலைவராகவும் , தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் தலைவராகவும் அனந்தகிருஷ்ணன் இருந்துள்ளார். இரண்டு முறை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

கல்லூரிகளில் சேர்க்கை எளித்தாக்கிய ஒற்றைச்சாளர நடைமுறைக்கு காரணமானவர் அனந்தகிருஷ்ணன். கணினி இணையத்தில் தமிழை பயன்படுத்துவதில் முயற்சி செய்து வெற்றி பெற்றவர்களில் அனந்தகிருஷ்ணன் ஒருவர். தமிழில் எழுதும் போது தனது பெயரை ஆனந்தகிருட்டினன் என்றுதான் அழைக்கவேண்டும் என்று சொல்வார்.

.