பாலியல் தொல்லை நடந்த இடங்களுக்கு பயிற்சியாளர் கெபிராஜை அழைத்துச் சென்று நேரடி விசாரணை: வீடியோ பதிவாக்கி ஆதாரம் சேகரிக்க சி.பி.சி.ஐ.டி முடிவு...

சென்னையில் பாலியல் தொல்லை கொடுத்த  வழக்கில், பாலியல் தொல்லை நடந்த இடங்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சியாளர்  கெபிராஜை அழைத்துச் சென்று சி.பி.சி.ஐ.டி போலீசார் நேரடி விசாரணை நடத்தி வருகின்றனர். 

பாலியல் தொல்லை நடந்த இடங்களுக்கு பயிற்சியாளர் கெபிராஜை அழைத்துச் சென்று நேரடி விசாரணை:  வீடியோ பதிவாக்கி ஆதாரம் சேகரிக்க சி.பி.சி.ஐ.டி  முடிவு...

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜ் 
பயிற்சி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு,  14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 4 -ஆம் தேதி சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து விசாரணையைத் துவங்கிய சி.பி.சி.ஐ.டி போலீசார்,  விசாரணை அதிகாரியாக ஆய்வாளர் லதா-வை நியமித்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 விசாரணையின் ஒரு பகுதியாக இன்று பாலியல் தொல்லை நடந்ததாக கூறப்பட்ட இடங்களுக்கு கெபிராஜை அழைத்துச் சென்று நேரடி விசாரணையை சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் நடத்தி வருகின்றனர். குறிப்பாக கெபிராஜ் நடத்தி வந்த தற்காப்புக் கலை பயிற்சி மையம், அவரின் வீடு மற்றும் நாமக்கல் மாவட்டத்திற்கும் கெபிராஜை அழைத்துச் சென்று விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர்  முடிவு செய்துள்ளனர். மேலும், சம்பவ இடங்களில் நடத்தப்படும் விசாரணை முழுவதையும் வீடியோ பதிவாக்கி வழக்கிற்கு தேவையான ஆதாரங்களை சேர்க்க சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.