‘மரகத நாணயம்’ இரண்டாம் பாகம்… உறுதி செய்த இயக்குனர்

‘மரகத நாணயம்’ இரண்டாம் பாகம்… உறுதி செய்த இயக்குனர்

மரகத நாணயம் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அப்படத்தின் இயக்குனர் ஏஆர்கே சரவணன் உறுதி செய்துள்ளார்.

2017-ம் ஆண்டு ஆதி நடிப்பில் வெளியான ‘மரகத நாணயம்‘ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஏஆர்கே சரவணன். விமர்சன ரீதியாக பல பாராட்டுக்களைப் பெற்ற இப் படத்தின் மூலம் சரவணன் கோலிவுட் சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்றார்.

தற்போது மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதை சரவணன் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “மரகத நாணயம் இரண்டாம் பாகத்திற்க்கான கதைக்கருவை தயாரிப்பாளர் டில்லிபாபு சாரிடம் கூறியிருக்கிறேன்..

அதற்கு முன்பு.. சத்யா ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துடன் விரைவில் ஒரு படத்தை துவுங்கவுள்ளேன்..

இவற்றையெல்லாம் விட.. கொரோனாவின் பிடியிலிருந்து தமிழகம் விரைவில் மீண்டெழ வேண்டும் என்பதே என் வேண்டுதல்கள்” என்று தெரிவித்துள்ளார்.