அடுத்த டார்கெட் ஐ.பி.எஸ் தான் - தமிழக அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் 25 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை மதுரை உள்ளிட்ட 6 மாநகராட்சி  ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

அடுத்த டார்கெட் ஐ.பி.எஸ் தான் - தமிழக அதிரடி அறிவிப்பு
தமிழகத்தில் 25 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை மதுரை உள்ளிட்ட 6 மாநகராட்சி  ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
 
சேலம் மாநகராட்சி ஆணையராக கிறிஸ்துராஜும், மதுரை மாநகராட்சி ஆணையராக கே.பி.கார்த்திகேயனும் பணியமர்த்தப்பட்டுள்ளார். இதேபோல் திருப்பூர் மாநகராட்சி  ஆணையராக கிராந்தி குமாரும், நெல்லை மாநகராட்சி  ஆணையராக விஷ்ணு சந்திரனும் நியமனம் செய்யப்பட் டுள்ளனர். கோவை மாநகராட்சி ஆணையராக இருந்த குமரவேல் பாண்டியன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை  மாநகராட்சியின் புதிய ஆணைய ராக ராஜ கோபால் சுங்காரா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
 
அதேபோல்  சென்னை மாநகராட்சியின் கல்வி துணை ஆணையராக டி.சினேகாவும், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக வந்தனா கார்க்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் சாகோசெர்வ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக ஐ.ஏ.எஸ் பத்மஜாவை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. மேலும் 17 ஐஏஎஸ் அதிகாரிகளை  பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் தலைமை செயலர் வெ.இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.