35 ஆண்டுகளுக்குப் பிறகு ‘நாயகன்’ மீண்டும் வர... மணியுடன் இணையும் கமல்...

கமலஹாசன், மணிரத்னம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக இணையவுள்ளனர். இந்த தகவல் சினிமா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

35 ஆண்டுகளுக்குப் பிறகு ‘நாயகன்’ மீண்டும் வர... மணியுடன் இணையும் கமல்...

63 ஆண்டுகளாக சினிமாவில் தனக்கென ஒரு இடம் உருவாக்கியதோடு, தமிழ் சினிமாவை உலகளவிற்கு வளத்து விட்ட சினிமா ஜாம்பவான், கலைத்தாயின் பிள்ளை, உலக நாயகன் கமலஹாசன், நாளை பிறந்தநாள் கொண்டாடுகிறார்.

தனது 67 வது பிறந்தநாளைக் கொண்டாடும் கமலுக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வரும் நிலையில், தற்போது ஒரு பெரிய தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | ரன்பீர் கபூர்-அலியா பட் தம்பதிக்கு பெண் குழந்தை...

35 ஆண்டுகளுக்குப் பிறகு, மணி ரத்னம் மற்றும் கமலஹாசன் தற்போது இணையவுள்ளனர். ‘நாயகன்’ என்ற மாபெரும் ஹிட் படம், தமிழ் சினிமாவையே ஸ்தம்பிக்க வைத்த நிலையில், அதற்கு அடுத்தப்படியாக எந்த படமும் உருவாகவில்லை என்பது பலரது ஏக்கமாகவே இருந்தது.

இந்நிலையில், தற்போது கமலஹாசன், மணிரத்னம், பி. மகேந்திரன், சிவா ஆனந்த் ஆகியோர் தயாரிக்க இருக்கும் கமலஹாசனின் 234ம் படத்தை உதயநிதி ஸ்டாலின் இணைந்து தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க | #EXCLUSIVE | காதல் திருமணம் தான் செய்வேன்.. உறுதி படுத்திய விஷால்...

ஆர்.கே.எஃப்.ஐ, ரெட் ஜெயண்ட் ஃபிலிம்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய மூன்றும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என தகவல்கள் கூறுகின்றன. இந்த தகவல் தற்போது தென்னிந்திய திரையுலகையே உற்சாகக் கடலில் துள்ள வைத்துள்ளது.

--- பூஜா ராமகிருஷ்ணன்