‘இந்திய சினிமா வென்றது’ - ஆஸ்கர் குறித்து நடிகர் ராம்சரண்...
ஆர்.ஆர்.ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் வென்றது குறித்து நடிகர் ராம் சரண் பெருமை தெரிவித்துள்ளார்.
சமீப காலங்களில் இந்தியா, உலகளவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், தெலுங்கு படமான ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ’நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடலுக்கான விருது பெற்றுள்ளது.
இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புப் பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர், பிரதமர் மற்றும் பல முக்கிய பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | ஆஸ்காரில் முதன்முறையாக கால் பதித்த தீபிகாவின் அழகான லுக் வைரல்...
இந்திய உடையில் பாரம்பரியத்துடன் இணைத்து ஃபியூஷனாக உடை அணிந்து வந்த ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர், தாங்கள் மிகவும் பெருமை அடைந்துள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.
மேலும், சீதாராமராஜு கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் ராம் சரண் தனது நன்றிகளை அறிக்கையாக தனது சோசியல் மீடியாக்களில் வெளியிட்டுள்ளார். அதில், ‘நாம் வெற்றி பெற்றோம், இந்தியா வெற்றி பெற்றது’ என பெருமையாக தெரிவித்துள்ளார்.
மேலும், கருவில் இருக்கும் தனது குழந்தை, பிறப்பதற்கு முன்பே, தனகும் தனது படக்குழுவினருக்கும் ஏகப்பட்ட நல்ல விஷயங்களைக் கொடுத்து அதிர்ஷ்டகரமானதாக இருப்பதாக ராம் கூறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இந்தியாவிற்கு இரண்டு ஆஸ்கார்கள்... மேடையை அலங்கரித்த இந்திய படங்கள்...
We have won!!
— Ram Charan (@AlwaysRamCharan) March 13, 2023
We have won as Indian Cinema!!
We won as a country!!
The Oscar Award is coming home!@ssrajamouli @mmkeeravaani @tarak9999 @boselyricist @DOPSenthilKumar @Rahulsipligunj @kaalabhairava7 #PremRakshith @ssk1122 pic.twitter.com/x8ZYtpOTDN