ஆஸ்காரில் முதன்முறையாக கால் பதித்த தீபிகாவின் அழகான லுக் வைரல்...
ஆஸ்காரில் முதன் முறையாக கால் தடம் பதித்த நடிகை தீபிகா படுகோனின் போட்டோக்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.
ஆஸ்கர் விருதுகள் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்து வருகிறது. இந்த ஆண்டு விருது வழங்கும் விழாவில் இந்தியா பெரும் பங்கு வகித்துள்ளது. சிறந்த் அபாடலுக்காக ஆர்.ஆர்.ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலும், ‘The elephant whisperers' - சிறந்த ஆவண குறும்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரங்கை அலங்கரிக்க இந்தியாவின் பிநதிநிதியாக நடிகை தீபிகா படுகோன் வந்த் அனிலையில், அவரது லூக் மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆஸ்கர் விருதின் பொம்மை போலவே, கருப்பு நிற போடிகோன் ட்ரெஸ் அணிந்திருந்தார். லூ-இஸ் விட்டோந் சிறப்பாக வடிவமைத்த கவுன் மற்றும் கார்டியஎர் ஜுவெல்லரியின் நகையை அணிந்து அழகான பொம்மை போல காட்சியளித்தார்.
மேலும் படிக்க | இந்தியாவிற்கு இரண்டு ஆஸ்கார்கள்... மேடையை அலங்கரித்த இந்திய படங்கள்...
இதற்கு பல இந்திய நட்சத்திரங்கள் தங்களது பாராட்டுகளைத் தெர்வித்தும் வருகின்றனர். குறிப்பாக சர்ச்சைகளின் அரசி என் அழைக்கப்படும் நடிகை கங்கனா ரனாவத் தீபிகாவை பாராட்டி தனது ட்விடர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அது நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது.
தீபிகாபடுகோன் எவ்வளவு அழகாக இருக்கிறார், முழு தேசத்தையும் ஒன்றாகப் பிடித்து, அதன் உருவத்தையும், நற்பெயரையும் அந்த மென்மையான தோள்களில் சுமந்துகொண்டு, மிகவும் அன்பாகவும் நம்பிக்கையுடனும் பேசுவது அவ்வளவு எளிதல்ல. இந்திய பெண்கள் சிறந்தவர்கள் என்பதற்கு தீபிகா நிமிர்ந்து நிற்கிறார் என்று நடிகை கங்கனா ரனாவத் ட்வீட் செய்துள்ளார்.
மேலும் படிக்க | ‘நாட்டு நாட்டு’ ஸ்டைலில் வரவேற்கப்பட்ட ஆஸ்கார் தொகுப்பாளர்...
"Do you know Naatu? Because if not, you're about to."
— LetsCinema (@letscinema) March 13, 2023
- Queen Deepika Padukone announces ‘Naatu Naatu’ live performance at the #Oscars
pic.twitter.com/T6q2ZGKTO0