பொன்னியின் செல்வன் இணையத்தில் வெளியிட தடை!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் இணையத்தில் வெளியிட தடை!

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம்  நாளை நாடு முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

மேலும் படிக்க | இந்த முறையும் கிடைக்கலையே.. விக்ரமின் வருத்தம்.. வெட்கப்பட்ட ஐஸ்வர்யா ராய்..!

இந்த படத்தை அரசு மற்றும் தனியாரின் இணையத்தள  சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 2405  இணையதளங்களில்  வெளியிட தடை விதிக்க வேண்டுமென பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Mani Ratnam's 'Ponniyin Selvan' first part run time revealed | Tamil Movie  News - Times of India

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, மிகுந்த பொருட் செலவில் படத்தை வெளியிட உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிட்டார்.

மேலும் படிக்க | ட்விட்டரில் ட்ரெண்டாகும் பய்காட் விக்ரம் வேதா ஹாஷ்டேக்...! புறக்கணிப்புக்கான காரணங்கள் என்ன ..!

இதையடுத்து, பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்தும், அவ்வாறு வெளியிடுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Spider Men visit Mani Ratnam's 'Ponniyin Selvan' sets ? Fun photo goes  viral - News - IndiaGlitz.com