ஆறாவது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட நபரால் பரபரப்பு...

சென்னையில் உள்ள தனியார் தங்கும் விடுதியின் 6வது மாடியில் இருந்து குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆறாவது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட நபரால் பரபரப்பு...

சென்னை : பெரியமேடு பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பாதிரியார் எனக்கூறி தங்கி வந்த பெரம்பூரைச் சேர்ந்த சைமன் சின்னி சந்திரன் (42) என்பவர் நேற்றிரவு 10.30 மணியளவில் விடுதியின் 6வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை.

18 லட்சம் பணத்தை இழந்துவிட்டதாகவும், இதுவரை பண உதவிகள் செய்த அனைவருக்கும் நன்றி எனவும் தனது இறப்பு பற்றி வழக்கறிஞர் கௌதம் என்பவருக்கு தகவல் தெரிவிக்குமாறும் கடிதம் எழுதி பேண்ட் பாக்கெட்டில் வைத்துவிட்டு தற்கொலை.

மேலும் படிக்க | வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி... காதலன் வீட்டை சூறையாடிய பெற்றோர்...

வழக்கறிஞர் கௌதமனிடம் போலீசார் நடத்திய விசாரணை நடத்தியதில் கடந்த 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட நபர் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜாமினில் எடுக்க ஆளில்லாமல் இருந்தவரை வழக்கறிஞர் கௌதமன் ஜாமினில் எடுத்தது தெரியவந்தது.

வழக்கறிஞர் கௌதமனிடம் தான் ரெட் ஹிட்ஸ் பகுதியில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் தான் வேலை பார்ப்பதாக தற்கொலை செய்துகொண்ட சைமன் தெரிவித்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

சம்பவ இடத்திலிருந்து உடலை கைப்பற்றி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விடுதியின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சேத்துப்பட்டு போலீசார் விசாரணை.

மேலும் படிக்க | தலை தீபாவளி அன்று பெண்ணின் தலையில் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய குடும்பம்...