வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி... காதலன் வீட்டை சூறையாடிய பெற்றோர்...

காதலிக்கு வேறொருவருடன் நிச்சயம் நடக்க இருப்பதை அறிந்த காதலன், காதலியை அழைத்துக் கொண்டு ஓட்டம் பிடித்ததால், ஆத்திரமடைந்த பெற்றொர் காதலன் வீட்டை சூறையாடியுள்ளனர்.

வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி... காதலன் வீட்டை சூறையாடிய பெற்றோர்...

திருவாரூர் : வடபாதிமங்கலம் அருகே உள்ள கீழகொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜே.சி.பி ஆபரேட்டர் தினேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த புவனேஸ்வரியை காதலித்து வந்துள்ளார். இவர்களது திருமணத்துக்கு எதிர்ப்பு வரும் என்ற பயத்தில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் கோயிலில் வைத்து திருமணம் செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. 

இதனை அறியாத பெண்ணின் பெற்றோர் மகளுக்கு நல்ல ஒரு இடத்தில் வரன் பார்த்து உடனடியாக நிச்சயதார்த்தம் செய்து விட வேண்டும் என எண்ணியுள்ளனர். தனக்கு ஏற்கனவே திருமணமானதை வீட்டில் சொல்வதற்கு பயந்த புவனேஸ்வரி, தனது காதல் கணவனிடம் நிச்சயதார்த்தம் குறித்து கூறியுள்ளார். 

மேலும் படிக்க | தட்டிக்கேட்டதால் தாக்கிய கொடூரம்... ஆபத்தான நிலையில் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதி...

காதல் மனைவிக்கு வேறொருவருடன் திருமணமா? என பதறி போன தினேஷ், அவரை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். தனது மகளை காணவில்லையே எங்கே போனார் என்ன ஆனார் என பரிதவித்து நின்ற பெற்றோருக்கு, தங்களது மகள் அதே பகுதியை சேர்ந்த தினேஷ்-உடன் ஓட்டம் பிடித்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

தங்களது மகள் இப்படி இளைஞருடன் சென்று விட்டாரே என நினைத்து ஆத்திரமடைந்த பெற்றோர், காதலனின் வீட்டை சூறையாடி, வீட்டிற்கு தீ வைத்தனர். அப்போது இரு தரப்பினரும் கொலை வெறியுடன் கத்தியால் தாக்கி கொண்டனர்.இதில் புவனேஸ்வரியின் சகோதரர், தினேஷின் சகோதரர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் படிக்க |  தொடர் கண்காணிப்பில் சிக்கிய வெளிநாட்டுப் பெண் போதை பெட்லர்...

இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள காதல் ஜோடி மற்றும் அவர்களது பெற்றோரை வடபாதிமங்கலம் போலீசார் தேடி வருகின்றனர். 

மாலைமுரசு செய்திகளுக்காக மன்னார்குடி செய்தியாளர் ஆனந்தன்...

மேலும் படிக்க |  மனதை பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு...