சிறுவனுடன் காதல்... கல்லூரி பெண் கர்ப்பம்.. குழந்தை தனதில்லை என மறுத்ததால் பரபரப்பு...

கள்ளக்குறிச்சியில் பட்டதாரி பெண்ணை 16 வயது சிறுவன் காதலித்து கர்ப்பமாக்கியிருக்கிறான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பர்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சிறுவனுடன் காதல்... கல்லூரி பெண் கர்ப்பம்.. குழந்தை தனதில்லை என மறுத்ததால் பரபரப்பு...

கள்ளக்குறிச்சி: இளங்கலை பட்டதாரி பெண் ஒருவர், கள்ளக்குறிச்சியின் விளாம்பர் பகுதியைச் சேர்ந்தவர். திருமணம் ஆகாத நிலையில் சமீபத்தில் ஒரு அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இது குறித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த பெண்ணின் பகுதியைச் சேர்ந்த 10 ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனுக்கும் உறவு இருந்திருக்கிறது என அப்போது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்..!

16 வயதே ஆன மைனர், பட்டதாரி பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். தங்களது காத்லின் சின்னமாக, விருத்தாச்சலக் கோவிலில் வைத்து இருவரும், தாலி கட்டி திருமணமும் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால், அலைபாயுதே பட பாணியில், இருவரும், அவரவர் வீடுகளுக்கு தெரியாமல் அமைதியாக எப்போதும் போலவே இருந்து வந்தனர்.

அவ்வப்போது இருவரும் தனியாக சந்தித்து உறவும் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அந்த பெண் கர்ப்பம் தரித்துள்ளார். இதனை, அறிந்த மாணவன், பயந்து உண்மையான திருமண பந்தத்தில் இணைய விருப்பமின்றி அந்த பெண்ணை உதறித் தள்ளியிருக்கிறார்.

மேலும் படிக்க | அரசனை நம்பி புருஷனை விட்ட கதை... கள்ளக்காதலனே கழுத்தை நெரித்துக் கொன்ற அவலம்...

கோபமான பெண், தனது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்ததை அடுத்து, இரு குடும்பமும் பேச்சு வார்த்தை நடத்தி, ஊரறிய அவரை ஏற்றுக் கொள்ள மாணவனை வற்புறுத்தியிருக்கின்றனர்.

ஆனால், மாணவனும் சரி, அவரது குடும்பத்தினரும் சரி, வேண்டாம் இந்த உறவு என்றும், சின்ன குழந்தையை மயக்கி தவறான பாதையில் அழைத்து சென்றதாக அந்த பெண் மீது குற்றம் சாட்டி, அவரைத் தவறாகவும் பேசியிருக்கின்றனர். இதனால் கவலை கொண்ட பெண் குடும்பத்தார் மாணவனிடம் மேலும் பேசிய போது, ஒரு திடுக்கிடும் தகவலை அவர் போனில் கூறினார்.

மேலும் படிக்க | வீட்டில் திருடிய நண்பனை அடித்தே கொலை... எலும்புகூடுகளை வைத்து அடையாளம் கண்டுபிடிப்பு...

என்னவென்றால், அந்த பெண்ணிற்கு, தான் மட்டுமல்லாது, மேலும் நால்வருடன் தொடர்பு இருந்ததாகவும், இதனால், அந்த குழந்தை கண்டிப்பாக தன்னுடையதாக இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறி, அந்த பெண்ணின் குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளார்.

இந்த சம்பவம் போலீசில் வந்தது. அப்போது இது குறித்து விசாரித்த பின், மாணவன் கூறியது உண்மை என்று தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண், வேறு 4 இளைஞர்களுடன் நெருக்கமாக பேசியிருந்தது தெரியவந்துள்ளது. ஆனால், அவர்களில் அதிக நேரம் அந்த மாணவன் பேசியதும், தாலி கட்டியதும் தெரியவந்ததால், மாணவன் தான் இக்குழந்தைக்கு தந்தை என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | மாணவர்களுக்கு நன்னெறி கல்வி மிக அவசியம்..!- உயர்நீதிமன்ற மதுரை கிளை...

அதுவும், மாணவன் குறித்த தகவல் அவ்வளவு எளிதாக தெரிய வாய்ப்பில்லாமல் இருந்தது. அவர் சிக்கியது எப்படி என்றால், அவன் அப்பெண்ணை தனது மனைவி என பள்ளி நண்பர்களிடம் அறிமுகப்படுத்தி இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து வெளியே தகவல்கள் கசிந்ததால் தான் மைனர் மாணவன் சிக்கி இருக்கிறார்.

தற்போது பச்சிளம் ஆண் குழந்தையுடன் இருக்கும் பெண்ணிற்கு பிறந்த குழந்தை உண்மையாகவே அந்த மைனருக்கு பிறந்ததா? இல்லை, வேறு யாரேனுக்கும் பிறந்ததா என்ற நோக்கில் டி.என்.ஏ. பரிசோதனையைத் தொடங்கியிருக்கின்றனர். மைனர் சிறுவன் சம்பத்தப்பட்டிருப்பதால் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை அடித்தே கொலை செய்த குடும்பம்...