முபின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது...

கோவையில் கார் வெடி விபத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

முபின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது...

கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில், நேற்று அதிகாலை கார் வெடித்து சிதறியதில், அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே,  அந்த நபர் வீட்டில் கடந்த 2019-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமையினர் ஆய்வு நடத்தியதாகவும், தற்போது தனிப்படை நடத்திய சோதனையில் அவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தீபாவளி அன்று திடீர் தீ விபத்து... இரண்டு மணி நேரம் போராடிய தீயணைப்புத்துறை...

மேலும், அவரது செல்போனை மீட்டுள்ள போலீசார், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் வெடி விபத்தில் உயிரிழந்த, ஜமேசா முபின் வீட்டில் இருந்து, மர்ம பொருள் கொண்டு செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஜமேசா முபின் வீட்டில் அருகில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில், சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேசா முபின் உள்ளிட்ட 5 பேர் மர்ம பொருளை தூக்கிக் கொண்டு செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த சி.சி.டி.வி. காட்சிகளில் உள்ள மற்ற 4 நபர்கள் யார் என்பது குறித்து தடைப்படை போலீசார் தீவிர விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | அதிகாலையில் காருக்குள் சிலிண்டர் வெடித்து விபத்து.. 6 தனிப்படைகள் அமைப்பு - டிஜிபி சைலேந்திர பாபு