காதலியின் பின்னால் சுற்றிய இளைஞருக்கு தீ வைப்பு... கொடூர காதலன் கைது...

சென்னையில் காதலி பின்னால் சுற்றித் திரிந்த ஒருவரை டீசல் ஊற்றி எரித்துக் கொலை செய்ய முயன்றுள்ளார் ஒரு காதலர். இச்சம்பவம் சென்னையையே அதிர வைத்துள்ளது.

காதலியின் பின்னால் சுற்றிய இளைஞருக்கு தீ வைப்பு... கொடூர காதலன் கைது...

சென்னை : வியாசர்பாடி பி.வி. காலனி பகுதியைச் சேர்ந்தவர் பஷீர். 21 வயதான இவர் அதே பகுதியில் வசித்து வந்த ஹாஜிரா என்ற பெண்ணை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார். முதலில் எதிர்ப்பு தெரிவித்த இருவீட்டாரும், பின்னர் இவர்களின் உறுதியைப் பார்த்து சிவப்புக் கொடியை போட்டுவிட்டு பச்சைக்கொடி காட்டி உள்ளனர்.   

மேலும் படிக்க | கால்பந்து விளையாட்டு வீராங்கனை உயிரிழப்பு...! விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு...!

தங்கள் காதலுக்கு இனி சிக்கலே இல்லை என்று நினைத்திருந்த வேளையில், பஷீர் - ஹாஜிராவின் காதலுக்கு குறுக்கே வந்துள்ளார் ராஜேஷ். வியாசர்பாடி கணேசபுரம் ஆறாது தெருவில் வசித்து வந்த 23 வயதான ராஜேஷ் ஹாஜிராவைப் பார்த்ததில் இருந்து மனதைப் பறிகொடுத்துள்ளார். ஆடுதொட்டியில் ஆடு மாடுகளை பராமரிக்கும் வேலையை பார்த்து வந்த ராஜேஷ், ஹாஜிராவின் பின்னால் சுற்றிய செய்தி பஷீரின் காதுகளுக்கு எட்டியது. 

மேலும் படிக்க | மாமனார் வீட்டிற்கு சென்ற மாப்பிளைக்கு அருவா வெட்டு ; காயத்துடன் ரயில் ஏறி தப்பியோட்டம்...

ஆனால் காதலி இதுகுறித்து எதுவுமே சொல்லாததினால் சந்தேகப்பிடியில் சிக்கினார் பஷீர். ராஜேஷின் காதலை ஹாஜிரா ஏற்றுக் கொண்டு விட்டதாகவும், அதனால்தான் தற்போது தன்னை விட்டு விலகிச் செல்வதாகவும் நினைத்தவர் கடும் ஆத்திரமடைந்தார். 

தனது காதலியின் பின்னால் சுற்றிக் கொண்டிருந்த ராஜேசுக்கு ஒரு சூடு வைக்க வேண்டும் என நினைத்த பஷீர் கொடூரமான ஒரு திட்டத்தை மேற்கொண்டார். ஆடுதொட்டியில் வேலைகளை முடித்து விட்ட ராஜேஷ் அங்கேயே தங்கியிருப்பார் என்ற தகவல் அறிந்ததையடுத்து டீசலோடு சென்றார் பஷீர். 

மேலும் படிக்க | புத்திமதி சொன்ன தலைமை ஆசிரியர்... கஞ்சா போதையில் குத்திக் கிழித்த மாணவன்...

ஒரு துணியை டீசலில் நனைத்த பஷீர், அதனை உறங்கிக் கொண்டிருந்த ராஜேஷின் மீது வைத்து விட்டு நெருப்பு வைத்தார். நெருப்பு சுட்டநொடி பதறிய ராஜேஷ் கத்தி கூப்பாடு போட்டார். அதற்குள் காலில் இருந்து இடுப்பு வரை தோல் கருகி போனது. இதையடுத்து ஆட்டுதொட்டியின் உரிமையாளர் ராஜேஷை பத்திரமாக மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

தற்போது 40 சதவீத தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட ராஜேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார். தன் காதலியை அபகரிக்க நினைத்ததற்காக கொடூரமாக எரித்துக் கொலை செய்ய முயற்சித்த பஷீரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் படிக்க | கிணற்றில் மிதந்த ஆண் சடலம்... கொலையா? தற்கொலையா? என விசாரணை...