கிணற்றில் மிதந்த ஆண் சடலம்... கொலையா? தற்கொலையா? என விசாரணை...

கழிவு நீர் வெளியேற்றும் நிலைய கிணற்றில் துர்நாற்றம் வீசியதில், அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

கிணற்றில் மிதந்த ஆண் சடலம்... கொலையா? தற்கொலையா? என விசாரணை...

வடசென்னை : தண்டையார்பேட்டை கார்பரேஷன் காலணி தெரு பகுதியில் மாநகராட்சியின் கழிவு நீர் (பம்பிங்ஸ்டேஷன்) வெளியேற்று நிலையம் அமைந்துள்ளது. இங்குள்ள கிணற்றில்  அடையளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தண்டையார்பேட்டை தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் மிதந்த (30வயது மதிக்கதக்க) ஆண் சடலத்தை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க | ஓசூரில் தலை, கை கால்கள் இல்லாத ஒரு ஆண் உடல் மீட்கப்பட்டுள்ளது...

அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசிய படி மீட்க பட்ட ஆண் சடலத்தின் அடையாளத்தை கானும் நடவடிக்கைகளில் போலிசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து கொலையா தற்கொலையா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்பகுதி வாசிகள் தெரிவிக்கையில், அருகாமையில் இருக்க கூடிய மதுபானக்கடையில் மது வாங்கும் பலரும் இருட்டாக இருக்கும் இந்த நிலையத்தில் வந்து தஞ்சம் அடைந்து விடுவதால் தான் இது போன்ற செயல்கள் நடப்பதாவும் காவல்துறை இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் படிக்க | கல்யாணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்த ஜோடி... இளம்பெண் தற்கொலை யார் காரணம்...