ஆப்கானிஸ்தானுடன் உறவை புதுப்பிக்க போராடும் இந்தியா.... காரணம் என்ன?!!

ஆப்கானிஸ்தானுடன் உறவை புதுப்பிக்க போராடும் இந்தியா.... காரணம் என்ன?!!

பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு, இப்போது ஆப்கானிஸ்தானில் கவனம் செலுத்தி வரும் சீனாவின் தலையீட்டைக் குறைப்பதில் இந்தியாவின் செயல்பாடு உள்ளது. 

புதுப்பிக்கப்படும் உறவு:

ஆப்கானிஸ்தானுடனான இருதரப்பு உறவுகள் இந்தியாவின் நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே படிப்படியாக மீண்டு வரும்.  இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டதை அடுத்து, ஆப்கானிஸ்தானில் சீனாவின் தலையீட்டைக் குறைக்க இந்தியா முனைப்பு காட்டி வருகிறது.  இருதரப்பு உறவுகளை முன்பு போலவே இயல்பானதாக மாற்ற, இந்தியா காந்தஹாரில் உள்ள தூதரகத்தை மீண்டும் திறக்க முடியும்.  பின்னர் இதற்கு முந்தைய வளர்ச்சிப் பணிகளை படிப்படியாக தொடங்க வாய்ப்புள்ளது.

திறக்கப்படுமா தூதரகம்?:

ஆப்கானிஸ்தானுடனான இயல்பான உறவை மீட்டெடுக்கும் விஷயத்தில், இந்தியா தனது சொந்த நலன்களை முதன்மையாக வைத்து முன்னேறி வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  மனிதநேய அடிப்படையிலான உதவியைத் தொடர, 2022 ஆம் ஆண்டின் மத்தியில் காபூலில் தூதரகத்தை மீண்டும் திறக்க முடிவு செய்தது இந்தியா.  இருப்பினும், தலிபான் அரசின் மீது பலமுறை கோரிக்கை விடுத்தும், இந்தியாவுக்கான தூதரை நியமிக்க அனுமதிக்கவில்லை.  இனி வரும் காலங்களிலும் அது சாத்தியமில்லை.

திட்டம் என்ன?:

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் கைகளில் உள்ள திட்ட செயல்பாடானது
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி மீண்டும் நிறுவப்பட்டதிலிருந்து எதிர்கால உறவுகளை மேம்படுத்தும் பணியை மேற்கொள்வதாக உள்ளது.   தோவலின் செயல்பாட்டின் படி தலிபான் அரசுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

ஒரே நோக்கம்:

தற்போது, ​​ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவானது சிக்கலான நிலையில் உள்ளது.  அதே நேரத்தில் சீனா ஆப்கானிஸ்தானுடன் பல ஒப்பந்தங்கள் மூலம் காபூல் வழியாக சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை ஏற்படுத்தும் நோக்கில் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானுடனான இருதரப்பு உறவுகளை படிப்படியாக மீட்டெடுப்பதன் மூலம் சீனாவின் தலையீட்டைக் குறைப்பதே இந்தியாவின் ஒரே நோக்கமாகும்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   பழங்குடியினருக்கான ‘ஆதி மஹோத்சவ்’..... தொடங்கி வைக்கிறார் பிரதமர்!!!