பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் - 11 பேர் பலி! இந்தியாவிலும் ஏற்பட்ட நில அதிர்வு!!

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் - 11 பேர் பலி! இந்தியாவிலும் ஏற்பட்ட நில அதிர்வு!!

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், வடமாநிலங்களில் அதன் பாதிப்பு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.


ஆப்கானிஸ்தானிலுள்ள இந்துகுஷ் மலைப்பகுதியிலும், பாகிஸ்தானின் பக்துன்குவாவிலும் 6.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து இந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் பல மாநிலங்களில் நேற்றிரவு நிலநடுக்கம் உணரப்பட்டது. குறிப்பாக வடமாநிலங்களில் இரவு நிலநடுக்கம் உணரப்பட்டது. அதன்படி டெல்லியில் இரவு சுமார் 10 மணியளவில் 3 வினாடிகள் வரை திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கட்டடங்கள் குலுங்கி பொருட்கள் உருண்டு விழுந்ததால் மக்கள் பீதியடைந்தனர். 

இதையும் படிக்க : உலக தண்ணீர் தினம்...முதலமைச்சர் விழிப்புணர்வு பதிவு...!

இதேபோல் உத்தர பிரதேச மாநிலம் நொய்டா, காசியாபாத் பகுதியில் நிலஅதிர்வு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி மக்களும் வீடுகளை விட்டு வெளியேறி வெட்டவெளியில் தஞ்சமடைந்தனர். இதுதவிர பஞ்சாப், ஹரியானா, காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் சில இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்களும் வீடுகளை விட்டு வெளியேறி பொதுவெளியில் தஞ்சமடைந்தனர்.