ஆளுநர் உரையில் கூறியவை என்ன....விரிவாக!!!

ஆளுநர் உரையில் கூறியவை என்ன....விரிவாக!!!

"வரப்புயர நீருயரும்; நீருயர நெல் உயரும்; நெல்லுயரக் குடி உயரும்; குடி உயரக் கோல்உயரும்; கோல்உயரக் கோன்உயர்வான்" என்ற ஒளவையாரின் முதுமொழி பாடலுடன் உரையை தொடங்கினார் ஆளுநர் ரவி.

ஆளுநர் ஆர்.என். ரவி உரையின் முக்கிய தகவல்கள்:

  • அத்திகடவு- அவிநாசி திட்டம் விரைவில் அமலுக்கு வரும்

  • மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 1.01 கோடி மக்கள் பயன்பெற்று உள்ளனர்.

  • 2ஆவது மற்றும் 3ஆவது கொரோனா அலையை தடுக்க மத்திய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்தது.

  • நீட் தேர்வை தடுக்க மசோதா நிறைவேற்றி குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி நடவடிக்கை எடுத்து உள்ளது.

  • இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் மாணவர்கள் கற்றல் திறன் மேம்படுத்தப்பட்டு உள்ளது.

  • போதை பொருட்கள் கடத்தல், விநியோகத்தை தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

  • மீன் பிடிக்கும் மீனவர்களுக்கான உரிமை மீட்டு எடுப்பதில் உறுதியாக உள்ளது.  232 மீனவர்கள் மீட்டு எடுக்கப்பட்டுள்ளனர்.  10 மீனவர்களை மீட்க நடவடிக்கை அரசு எடுத்து வருகிறது.

  • காலநிலை மாற்றம் தொடர்பாக கருத்தரங்கம் நடத்தி உள்ளது தமிழ்நாடு அரசு.  இதற்காக உலகளாவிய நிபுணர்களுடன் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

  • கடுவேலி, அகத்தியார் மலையில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்டு உள்ளது.

  • பாலுக்கான கொள்முதல் விலை ₹3 உயர்த்தப்பட்டு உள்ளது. 

உரை நிறைவு:

ஜெய் ஹிந்த் என கூறி தனது உரையை நிறைவுசெய்த ஆளுநர் ஆர்.என்.ரவி.யைத் தொடர்ந்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார்.

அவையை வெளிநடப்பு:

ஆளுநர் உரையைக் குறித்து சில விமர்சனங்களை முதலமைச்சர் முன் வைத்தபோது அவையை விட்டு வேகமாக வெளியேறினார் ஆளுநர் ஆர். என். ரவி.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  அவையை விட்டு வேகமாக வெளியேறிய ஆளுநர்.... காரணம் யார்?!!