பழநியில் தக்காளி விற்பனை அதிரடி குறைவு...ஆனந்தத்தில் பொதுமக்கள்!

பழநியில் தக்காளி விற்பனை அதிரடி குறைவு...ஆனந்தத்தில் பொதுமக்கள்!

பழநி காய்கறி சந்தையில், ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். 

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக தக்காளி வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால், அதன் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. கிலோ ஒன்றுக்கு சுமார் 200 ரூபாய் வரை தக்காளியின் விலை எட்டியதால், இல்லத்தரசிகள் கவலையடைந்து காணப்பட்டனர். 

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழநி காய்கறி சந்தையில், தற்போது தக்காளியின் விலை குறைந்து காணப்படுகிறது. தக்காளி வரத்து அதிகரிப்பின் காரணமாக அங்கு, ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தக்காளி விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com