மதுரை வந்தடைந்தார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு...!

மதுரை வந்தடைந்தார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு...!
Published on
Updated on
1 min read

மகா சிவராத்திாியை முன்னிட்டு தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ள குடியரசு தலைவா் திரவுபதி முா்மு மதுரை வந்தடைந்தார்.

மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா மையத்திற்கு வருகை தரவுள்ள குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ளார். அதன்படி  இன்று காலை 11 மணி அளவில் புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்த குடியரசு தலைவர்,  மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை புரிந்துள்ளார்.

இதனால் மதுரை மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தி உள்ளன. மேலும் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து, கோவை ஈஷா மையத்தில் இன்று நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com