கோவிலை தினமும் நேரத்திறக்கு திறக்கவேண்டும் என பாஜகவினர் போராட்டம்

கோவிலை தினமும் நேரத்திறக்கு திறக்கவேண்டும் என பாஜகவினர் போராட்டம்

பூந்தமல்லி அருகே உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில் சரிவர திறப்பதில்லை என்று பாஜகவினர் மற்றும் பக்தர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்
Published on

சென்னை பூந்தமல்லி அருகே பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது கோவில் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரம் செய்யக்கூடிய சிறப்பு அம்சம் பெற்ற கோவிலாக திகழ்ந்து வருகிறது இந்நிலையில் இக்கோவில் சரிவர நேரத்திற்கு திறப்பதில்லை என்றும் சரி வர பூஜைகள் செய்வதில்லை என்றும் குற்றச்சாற்று தொடர்ந்து எழுந்து வந்தது இந்நிலையில் இன்று பிஜேபியின் முன்னாள் மாவட்ட செயலாளர் சாமி தரிசனம் செய்வதற்கு வருகை தந்த போது கோவில் திறக்கவில்லை என்பதால் கோயில் நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் அங்கிருந்த பக்தர்களும் சரமாரியாக கோவில் நிர்வாகிகளிடம் கேள்விகளை எழுப்பினர் அதற்கு சரிவர பதில் அளிக்காததால் பாஜக நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பூந்தமல்லி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோவில் நிர்வாகிகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இதில் கோவில் நிர்வாகிகள் இனி இது போன்ற தவறுகள் ஏற்படாது என்று உறுதி அளித்தது அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர் இதனால் இப்பகுதி முழுவதும் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com