அதிமுக பொதுக்குழு தேர்தல் வழக்கு: ஓ.பி.எஸ் தரப்பு எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல்!

அதிமுக பொதுக்குழு தேர்தல் வழக்கு: ஓ.பி.எஸ் தரப்பு எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல்!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எழுத்துப் பூர்வமான வாதங்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபி எஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.


அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து  ஓபி எஸ் தரப்பில் மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான மனுக்களை கடந்த மார்ச் 22ஆம் தேதி விசாரணை செய்த நீதிபதி குமரேஷ் பாபு, ஓபி எஸ் தரப்புக்கு எழுத்துப் பூர்வமான வாதங்களை  தாக்கல் செய்ய அனுமதியளித்து தீர்ப்பை ஒத்தி வைத்தார். 

இதையும் படிக்க : டாஸ்மாக் மூலம் மட்டுமே அரசு நடைபெறவில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்!

இந்நிலையில், ஓ.பி. எஸ்., மற்றும் அவரது அணியினரின் சார்பில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த புதன்கிழமை நடைபெற்ற வாதங்களை தொகுத்து எழுத்துப்பூர்வ வாதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் குறித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுச் செயலாளர் தேர்தல் முடிவை அறிவிப்பது முரணானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.