பொங்கலை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் இன்று துவக்கம்...முதல் சிறப்பு ரயில் எங்கே?
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயங்க உள்ளது.
5 சிறப்பு கட்டண ரயில்கள் :
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட 5 சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்த டிக்கெட்டுகள் :
அதன்படி, ஜனவரி 12-ம் தேதி தாம்பரம் - நெல்லை ரயில் இரவு 9 மணிக்கும் , ஜனவரி 13-ம் தேதி நெல்லையிலிருந்து எழும்பூருக்கு மதியம் 1 மணிக்கும், இதேபோல் தாம்பரத்தில் இருந்து நாகர்கோயிலுக்கும் , மறு மார்கமாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கும், சென்னை சென்ட்ரலில் இருந்து எர்ணாகுளத்திற்கும் என 5 சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
இதையும் படிக்க :ஆளுநர் சர்ச்சை: குடியரசு தலைவரிடம் மனு வழங்கிய அரசு பிரதிநிதிகள்... !
இதற்கான முன்பதிவு கடந்த சில வாரங்களுக்கு முன்பே ஆரம்பமான நிலையில், துவங்கிய சில நிமிடங்களிலேயே முழுமையாக விற்று தீர்ந்தது. இதேபோல் தட்கள் முன்பதிவு நேற்றைய தினம் துவங்கிய நிலையில் டிக்கெட்டுகள் முழுமையாக விற்று தீர்ந்தன.
முதல் சிறப்பு ரயில் இன்று துவக்கம் :
இந்நிலையில் ரயில் நிர்வாகம் அறிவித்த 5 சிறப்பு கட்டண் ரயில்களின் இயக்கமானது இன்று துவங்க உள்ளது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி செல்லக்கூடிய முதல் சிறப்பு ரயில் இன்று இரவு 9 மணிக்கு இயக்கப்பட இருக்கிறது. அதேபோல் எர்ணாகுளத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வரக்கூடிய மற்றொரு சிறப்பு ரயில் இன்று இரவு 11:15 மணிக்கு இயக்கப்பட உள்ளது.