ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய கிருத்திகா உதயநிதி...

இயக்குனர் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் மனைவியான கிருத்திகா உதயநிதி ஆதரவற்ற குழந்தைகளுடன் தீப ஒளி திருநாளைக் கொண்டாடியுள்ளார்.

ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய கிருத்திகா உதயநிதி...

“உதவும் உள்ளங்கள்” என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி அவர்களுக்காக “ஆனந்த தீபாவளி” என்ற நிகழ்வை நடத்தி வருகின்றனர். “ஆனந்த தீபாவளி”யின் 25வது வருடமான இந்த ஆண்டில் பல குழந்தைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | ”துணிவு” படத்திலும் காப்பியா? அதுவும் அருண் விஜய் படத்திலிருந்து.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..!

இன்று நடந்த இந்நிகழ்வில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி, வாணி போஜன், தான்யா ரவிசந்திரன், அஷ்வின் கலந்து கொண்டு குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினர்.

நிகழ்வில் பிரலங்கள் குழந்தைகளுடன் கொண்டாடிய தீபாவளி அற்புதமான நிகழ்வு என்று கூறி  “உதவும் உள்ளங்கள்” அமைப்பிற்கு  தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

மேலும் படிக்க | குழந்தைகளுக்கு நடக்கும் பிரச்சனைகளை பெற்றோர்கள் காது கொடுத்து கேட்க வேண்டும்...கிருத்திகா உதயநிதி. !!

15 ஆதரவற்ற இல்லங்களில் உள்ள குழந்தைகளுடன் தீபாவளி இன்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்ற அவர், இதுபோன்று ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடுவது நம்முடைய கடமை தான் என்றார். 

மேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நீங்கள் போட்டியிடுவதற்கான  வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,  இது குறித்து நான் யோசிக்கவே இல்லை என தெரிவித்தார்.

மேலும் படிக்க | தி.நகரில் அலைமோதும் மக்கள் கூட்டம்...! பாதுகாப்பு பணிகளை பார்வையிட்ட மாநகர காவல் ஆணையர்...!