விபத்தில் சிக்கியவருக்கு...விரைவாக உதவிய முதலமைச்சர்...!

விபத்தில் சிக்கியவருக்கு...விரைவாக உதவிய முதலமைச்சர்...!

சென்னை தேனாம்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியவரை, உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்ப முதலமைச்சர் ஸ்டாலின் உதவி செய்தார். 

சரியான நேரத்தில் உதவிய முதலமைச்சர்:

சென்னை டி.எம்.எஸ் அருகே சாலை விபத்தில் சிக்கியவருக்கு, அவ்வழியே சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காரில் இருந்து இறங்கி வந்து அந்த நபரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்தார். 

செய்திக்குறிப்பில் வெளியான செய்தி:

இது குறித்து தமிழ்நாடு அரசின் சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தலைமைச் செயலகத்திலிருந்து அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது சென்னை,  டி.எம்.எஸ் மெட்ரோ இரயில் நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சூளைமேட்டைச் சேர்ந்த திரு.அருள்ராஜ் என்பவர் சாலையில் எதிர்பாராதவிதமாக தடுமாறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதை கண்டு கான்வாய் வாகனத்தை நிறுத்தி இறங்கிச் சென்று காயமடைந்தவரை உடனடியாக ஆட்டோ ஒன்றில், சிகிச்சை  மேற்கொள்வதற்காக காவலருடன் இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இதையும் படிக்க: ஸ்டாலின் விரித்த வலையில் வசமாக சிக்கிய ஈபிஎஸ்...எப்படி தப்ப போகிறார்?

விபத்தில் சிக்கியவரை குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனைக்கு அனுப்புவதற்கு துரித நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சரின் செயலை அனைவரும் பாரட்டி வருகின்றனர். இதைத்தொடர்ந்து, அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.