கலாஷேத்ரா விவகாரம்: குற்றம்சாட்டப்பட்ட 4 பேராசிரியர்கள் பணி நீக்கம்...!

கலாஷேத்ரா விவகாரம்: குற்றம்சாட்டப்பட்ட 4 பேராசிரியர்கள் பணி நீக்கம்...!

கலாஷேத்ரா விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. 


கலாஷேத்ரா விவகாரத்தில் பாலியல் புகாருக்கு உள்ளான 4 பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவியர், கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மாநில மகளிர் ஆணையத் தலைவி குமாரி நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் மாநில மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இதையும் படிக்க : 2 ஆண்டுகள் சிறை...மேல்முறையீடு செய்த ராகுல்காந்தி...ஜாமீனை நீட்டித்த சூரத் நீதிமன்றம்!

தொடர்ந்து, பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், புகாரில் குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர்கள் ஹரிபத்மன், சஞ்சித் லால், ஸ்ரீநாத் மற்றும் சாய் கிருஷ்ணா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, கல்லூரி நிர்வாகம் மாணவியரிடம் வாய் மொழி உத்தரவு அளித்துள்ளது. அத்துடன், மாணவிகள் தரப்பில் முன்வைக்கப்படும் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றும், கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகம் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.