கடைசி ஒருநாள் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி...

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.
கடைசி ஒருநாள் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி...
Published on
Updated on
1 min read

இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி  50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய விராட் கோலி 166 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஷூப்மன் கில் 116 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து 391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. இறுதியாக 22 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை அணி 73 ரன்களில் சுருண்டது. 

இதனால் இந்தியா 317 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், சர்வதேச அரங்கில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது. மேலும், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com