8 பதக்கங்களுடன் வீடு திரும்பிய இந்திய குத்துச்சண்டை வீரர்கள்...
உலக குத்துச்சண்டை தொடரில் இந்தியாவுக்கு 3 வெள்ளிப்பதக்கங்கள் கிடைத்துள்ளன.

பல்கேரியாவில் நடைபெற்ற குத்துச்சண்டை தொடரில் இந்தியாவின் அனாமிகா, அனுபமா மற்றும் கோவிந்த் ஆகியோர் வெள்ளி வென்றுள்ளனர். மகளிர் 81 கிலோ எடைப்பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை எம்மாவிடம் பூஜ்ஜியத்திற்கு 5 என்ற புள்ளிகள் கணக்கில் அனுபமா தோல்வி கண்டார்.
50 கிலோ எடைப்பிரிவில் சீன வீராங்கனை ஹூ மெயி-யிடம் அனாமிகா தோல்வியைத் தழுவினார். இதேபோல், ஆடவர் 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் கோவிந்த் சஹானி, உஸ்பெகிஸ்தான் வீரரிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மேலும் படிக்க | 76 வயதில் தடகளம்.... தேசிய போட்டியில் சாதனை செய்த சாமுவேல்!!!
மொத்தத்தில், அனுபமா, அனாமிகா மற்றும் கோவிந்த் வீரர்கள் வெள்ளிப்பதக்கங்களும், கலைவானி, ஷ்ருதி, மோனிகா, சச்சின் மற்றும் நிஸ்வாமித்ரா ஆகியோர் வெண்கல பதக்கங்களும் வென்றுள்ளனர்.
இவர்களது வெற்றியைக் கொண்டாடும் வகையில், இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு (Boxing Federation) தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர்களது போட்டோக்களை பதிவிட்டு பெருமை பதிவு போட்டுள்ளது. இதற்கு பலரும் பதில் பதிவிட்டு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | IND VS AUS : 2 வது டெஸ்ட் தொடரிலும் அசத்திய இந்திய அணி...!
Our