குடியரசு தின விழா அணிவகுப்பு...! தமிழக அலங்கார ஊர்தி தேர்வு...!

குடியரசு தின விழா அணிவகுப்பு...! தமிழக அலங்கார ஊர்தி தேர்வு...!

டெல்லி : குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழ்நாடு அரசு அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

குடியரசு தின விழா வருகிற 26 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி டெல்லி ராஜபாதையில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். தமிழக அலங்கார ஊர்தி, இந்திய ராணுவத்தின் வலிமையை பிரதிபலிக்கும் வகையில் ராணுவ வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு, ராணுவ தளவாடங்களின் அணிவகுப்பு நடைபெறும். அத்துடன் நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்தி அணிவகுப்பும் நடைபெறும்.

அந்த வகையில், இந்தாண்டு 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் குடியரசு தின விழாவில் பங்கேற்க மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஏழு கட்டமாக நடைப்பெற்ற தேர்வுகளில் இறுதியாக ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், அசாம், குஜராத், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அனுமதி மறிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு தமிழக ஊர்தி தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : வங்கியில் திடீர் தீ விபத்து...!  தளவாட பொருட்கள் எரிந்து சேதம்...!